Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் ... பரவும் பயங்கரவாதம்: அமிர்தானந்தமயி கவலை பரவும் பயங்கரவாதம்: அமிர்தானந்தமயி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரியமான சேவல் சண்டை: பழமையான கல்வெட்டில் தகவல்
எழுத்தின் அளவு:
பாரம்பரியமான சேவல் சண்டை: பழமையான கல்வெட்டில் தகவல்

பதிவு செய்த நாள்

31 ஜன
2017
11:01

தமிழகத்தில், பாரம்பரியமாக சேவல் சண்டை நடத்தப்பட்டது,  விழுப்புரத்தில் உள்ள 1600 ஆண்டுகள் பழமையான சேவல் கல்வெட்டு  மூலம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் உள்ள, பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில், சேவல் தொடர்பான கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டு, கடந்த 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, அப்போது  செயற்பொறியாளராக இருந்த கொடுமுடி சண்முகம் பாதுகாத்து வைத்துள்ளார். கல்வெட்டு குறித்து, விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் முனைவர் ரமேஷ் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், அரசலாபுரம் கிராமத்தில் இருந்து, இந்த கல்வெட்டு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில், நின்ற நிலையில்  கம்பீரமான தோற்றத்தில், 62 செ.மீ., உயரம், 55 செ.மீ., அகலம் கொண்டதாக சேவல் செதுக்கப்பட்டுள்ளது.

சேவலின் முதுகுபுறத்துக்குமேல், தமிழ் மொழி வட்டெழுத்தில் இரண்டு வரிகளிலும், சேவல் கால்களுக்கு முன்பாக கடைசி வரியும் எழுதப்பட்டுள்ளது. இதில், முகையூரு மேற்சே, ரிகு யாடிக, ருகிய கோழி என பிரித்து குறிப்பிட்டுள்ளது. இதற்கு, முகையூர் என்ற ஊரின் மேற்சேரியில் நடந்த சேவல் சண்டையில், இறந்துபட்ட சேவல் என்பது பொருள். இந்த கல்வெட்டு கி.பி., 4ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்பதால், சேவல் சண்டையானது, 1600 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கல்வெட்டு, தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகிறது. இவ்வாறு, முனைவர் ரமேஷ் கூறினார். இந்த சேவல் கல்வெட்டு, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புதர்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சின்னமாக திகழும் கல்வெட்டை  பாதுகாக்க வேண்டும் என, ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். –நமது நிருபர்–

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar