கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2017 03:03
சமூகத்தில் செல்வாக்குடன் இருக்கும் கும்பராசி அன்பர்களே!
ராசிக்கு 2ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன், 3ல் உள்ள செவ்வாய் ஆகியோர் நற்பலனை வழங்குவர். செவ்வாயால் பக்தி உயர்வு மேம்படும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் நிதானமாக செயல்படுவது அவசியம். குடும்பத்தில் சுக்கிரனால் பொன், பொருள் சேரும். தேவை அனைத்தும் தாராள செலவில் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சுபவிஷயத்தில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். மார்ச் 25,26ல் பெண்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டவசமாக பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 20,21,22ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். ஆனால் ஏப்.1,2ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். ஒதுங்கி இருப்பது நல்லது. மார்ச் 25,26ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களின் வளர்ச்சியில் அக்கறை கொள்வீர்கள். உடல்நலம் சுமாராக இருக்கும். அலைச்சலால் அசதிக்கு ஆளாவீர்கள். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி படிப்படியாக உண்டாகும். தொழில் ரீதியான பயணம் அடிக்கடி மேற்கொள்வீர்கள். அரசு வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. விரிவாக்கம் செய்ய வங்கி கடன் எளிதாக கிடைக்கும். சனியால் அதிக அலைச்சல் ஏற்பட்டாலும் செவ்வாயின் சாதக பலனால் பணவரவு அதிகமாகும். மார்ச் 23,24,27,28, 29ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். ஏப். 5,6 ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அரசு ஊழியர்களுக்கு பணியிடத்தில் நற்பெயரும், மதிப்பும் கிடைக்கும். எதிர்பார்த்த கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். கோரிக்கைகளை ஏப்.11க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். மார்ச் 18,19 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.
கலைஞர்கள் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று மகிழ்வர். சேமிக்கும் விதத்தில் வருமானம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்புண்டு.
மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். நண்பர்களின் விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம். விடாமுயற்சி இருந்தால் போட்டியில் வெற்றி உண்டாகும்.
விவசாயிகள் நல்ல விளைச்சல் காண்பர். நெல், கோதுமை, சோளம், கேழ்வரகு, பயறு வகைகள், பழ வகைகள் நல்ல வருவாயைக் கொடுக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். ஏப்.11க்கு பிறகு வழக்கு விவகாரத்தில் மெத்தன போக்கு வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தில் குதூகலமாக இருப்பர். உங்களின் பங்களிப்பால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறைவிருக்காது. ஏப். 7,8 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 30,31ல் ஆடை, அணிகலன் வாங்க யோகமுண்டாகும். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம்.
நல்ல நாள்: மார்ச் 18,19,20,21,22,25,26,30,31 ஏப்.5,6,7,8
கவன நாள்: மார்ச் 14, ஏப்.9,10,11 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு அடிக்கடி செல்லுங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். முருகன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை தானம் செய்வது நல்லது. தினமும் காலையில் சூரியனை வழிபட தவறாதீர்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »