பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
12:04
நாகப்பட்டினம்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர், மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். புனித வெள்ளியன்று, சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசு கிறிஸ்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அதுவே, ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று முன்தினம் இரவு, 10:45 மணிக்கு, தேவாலய அதிபர், பிரபாகர் தலைமையில், பாதிரியார்கள், 25 பேர் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. நள்ளிரவு, 12.00 மணிக்கு உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வு, தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது. நேற்று அதிகாலை, 1:45 மணி வரை நடந்த சிறப்பு திருப்பலியில் திரளானோர், மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.