Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரியில் தயாராகும் தேர் ... திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதைந்து வரும் இடையார்பாக்கம் மகாதேவர் கோவில்!
எழுத்தின் அளவு:
சிதைந்து வரும் இடையார்பாக்கம் மகாதேவர் கோவில்!

பதிவு செய்த நாள்

26 மே
2017
12:05

இடையார்பாக்கம்: இடையார்பாக்கம் மகாதேவர் கோவிலில், காவலர் இல்லாததால் அங்கு, பல சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதோடு, கோவில் சீரழியும் அபாயம் உள்ளதாக, பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், இடையார்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, கி.பி., 11ம் நுாற்றாண்டில், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் உள்ளது. இங்குள்ள இறைவன், திருப்பாதகாடுடையார் பெயரையே இந்த கிராமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த பெயர் திரிந்து, இடையாற்றுப்பாக்கமாக அழைக்கப்பட்டு வந்ததாக தொல்பொ ருள் துறை பெயர் பலகையில் தெ ரிவிக்கிறது.

இடையாற்றுப்பாக்கம் மற்றும் ராஜ வித்யா தர சதுர்வேதிமங்கலம் என, அழை க்கப்பட்டு வந்த இடையாற்றுப்பாக்கம் பெயரே நாளடைவில், இடையார்பாக்கம் என, மருவியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இங்குள்ள மகாதேவர் கோவில், துாங்காண ை மாட வடிவத்தில் கோபுரமின்றி காணப்படும் சிவன் கோவிலாக காட்சியளிக்கிறது. இந்த கற்கோவிலை பாதுகாக்கும் பணியை , தொல்லியல் துறை கண்காணித்து வருகிறது. இந்த கோவிலை கண்காணிப்பதற்கு, ஒரு காவலரை தொல்லியல் துறை நிர்வாகம் நியமித்துள்ளதாகவும், அவர் கோவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், கோவில் சுவரை, அங்குள்ளவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், கோவில் வளாகத்திலிருக்கும் மருத்துவ குணமுடைய செடிகள் போதிய பராமரிப்பு இன்றி கருகியுள்ளது. அதே போல், கோவில் குளத்தின் படித்துறைகள் சிதிலமடைந்துள்ளன. கோவிலுக்கு செல்லும் பாதை ஓரங்களில் சீமை க்கருவேல மரங்கள் புதர் மண்டி உள்ளது. மொத்தத்தில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கோவில், சீரழிந்த நிலையில் அலங்கோலமாக காட்சியளிப்பதாக பக்தர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

படியளக்கும் பரமனுக்கு தண்ணீர் தேவை!

மகா தேவர் கோவிலின் பெருமையை, கிராமவாசிகள் அறியாததால்,கோவில் சீரழிந்தநிலையில் காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீபம் ஏற்றுகின்றனர். எண்ணெயை சுவரில் தடவி செல்கின்றனர். சுவரில் இருக்கும் கல்வெட்டு எழுத்துக்கள் மறையும் அபாயம் உள்ளது. மேலும், கோவில் வளாகத்தில் இருக்கும் செடிகளுக்கு, தண்ணீர் பாய்ச்சுவதற்கு முடியாமல், மூலிகை செடிகள் கருகியுள்ளன. செடிகளுக்காக தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டகை பம்பு காட்சிபொருளாக மாறி உள்ளது. -பக்தர்கள், மகாதேவர் கே ாவில் முகப்பு தோற்றம். இடம்: இடையார்பாக்கம். இடையார்பாக்கம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலம்; மயிலம் முருகன் கோவில் சஷ்டி பூஜை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலம் வள்ளி, ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலை புனிதப்படுத்தும் விதமாக ‛பவித்ர உற்சவ’ பூஜை ஆக., 1 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதால் பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar