பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
11:06
திருப்பூர்: கொங்கண கிரி கந்த பெருமான் கோவிலில், ராஜகோபுரம் திருப்பணி மீண்டும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவது, பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. திருப்பூரில், பிரசித்தி பெற்ற கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், காலேஜ் ரோட்டில் உள்ளது. பாடல் பெற்ற தலமான இக்கோவில், குன்று மீது பாலை மரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு, ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள், கடந்த, 1994ல் துவங்கியது. பல்வேறு காரணங்களால், இப்பணி இழுபறியாகி வந்தது; ராஜகோபுரம் கட்டும் பணி, பாதியில் நின்றது. இதையடுத்து, கோவில் பக்தர்கள் இணைந்து, திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளையை துவக்கி, மீண்டும் கோவில் திருப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 5.25 ஏக்கர் பரப்பளவுள்ள கோவில் வளாகத்தில், சுற்றுச்சுவர், பக்தர்களுக்கு கிரி வலப்பாதை மற்றும் தேர் ரத வீதி அமைக்கும் பணி, திருமண மண்டபம், அன்னதான மண்டபம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த, 23 ஆண்டுகளுக்கு பின், ராஜகோபுரம் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 21 அடி உயரம், நிலை தளத்துடன், 67 அடி உயரத்தில், ஐந்து நிலை ராஜ கோபுரம் அமைக்கப்பட்டு வருவது, பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.