பதிவு செய்த நாள்
03
ஜூலை
2017
11:07
நாமக்கல்: நாமக்கல்லில், தர்ம ரக்ஷண ஸமிதி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில், உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. ஐ.எம்.ஏ., மாவட்ட தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். விழாவில், தன்வந்திரி சிறப்பு ஹோமம் நடந்தது. டாக்டர்கள் மல்லிகா, சந்திரா, உமா, மாலதி, தனபாக்கியம், கார்த்திகா, ஜோஸ்பின்ராணி, முபாரக் ஆகியோர் குத்துவிளக்கேற்றி யாகத்தை துவக்கினர். உலக மக்கள் அமைதியோடும், மகிழ்ச்சியோடும் தர்மபாதையில் செல்லவும், தன்வந்திரி பகவானுக்கு ஹோமம் நடந்தது. நாமக்கல் மற்றும் திருப்பூர் ராமகிருஷ்ண ஆஸ்ரம நிறுவனர் பூரணசேவானந்த மஹாராஜ் அருளாசி வழங்கினார். ஐ.எம்.ஏ., மேற்கு மண்டல தலைவர் டாக்டர் பழனிசாமி, நாமக்கல் தமிழ் சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல் தர்ம ரக்ஷண ஸமிதி துணைத்தலைவர் செல்லமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர். டாக்டர் சுந்தரராமன் நன்றி கூறினார்.