Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் ஆடி லட்சார்ச்சனை விழா: ஜூலை ... ஆண்டாள் கோயில் ஆடிப்பூரவிழா: ஜூலை 19 ல் துவக்கம் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரவிழா: ஜூலை 19 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவம் நிறைவு

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2017
11:07

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் கடந்த 7 நாட்களாக நடந்த பிரம்மோற்ஸவ விழா கொடியிறக்கத்துடன் முடிவடைந்தது.

இக்கோயிலில் பிரசித்தி பெற்ற பிரம்மோற்ஸவ திருவிழா ஜூலை 6 ல் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.  கருடக்கொடியுடன் ஊர்வலமும், பின்னர் கொடியேற்றமும் நடந்தது.  மாலையில் சுவாமி சேஷவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.  2ம் நாளில் யாகபூஜைகள், சிறப்பு திருமஞ்சன வழிபாட்டுடன் சுவாமி அனுமந்த வாகனத்தில் எழுந்தருளல் நடந்தது.  3 ம் நாளில் கருடவாகனத்தில் வீதியுலாவும், 4 ம் நாளில் யானை வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது.  முக்கிய நிகழ்வாகன திருக்கல்யாண வைபவம் 5 ம் நாளில் நடந்தது.  

இதில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு தாலி அணிவித்து அருள்பாலித்தார்.  6 ம் நாளில் தேரோட்டம் நடந்தது.  அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி தாயார்களுடன் சேர்ந்து எழுந்தருளி வீதியுலா சென்றார்.  மதுரை பிரபாமோகன் குழுவினரின் பஜனை இன்னிசை கச்சேரி நடந்தது.  இறுதி நாளில் ஸப்தாவர்ண பல்லக்கு ஊர்வலம் நடந்தது.  இதில் சுவாமி தாயார்களுடன் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  மீண்டும் கோயில் திரும்பிய சுவாமிக்கு எதிர்சேவை நடந்தது.  பின்னர் 7 நாள் விழாவிற்கான சுபமங்கள பூஜைகள் நடந்தது.  இறுதி நிகழ்ச்சியாக கோயில் கொடிமரத்திலிருந்து மங்கள மேளங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.  சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சேதுநாராயணப் பெருமாள் கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன், நிர்வாகிகள் கண்ணன், பாபு ஏற்பாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகாமிசுந்தரி அம்மன் கோவில் ஐப்பசி பூர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar