Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் கோயில் ஆடிப்பூரவிழா: ஜூலை 19 ... கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு : அறநிலையத்துறை புதிய உத்தரவு கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் நிலவரை சுரங்கத்தில் 9 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2017
11:07

ஆத்துார்:ஆத்துார் அருகே, கோயில் கட்டுமான பணியின் போது, பூமிக்கு அடியில், 5 அடி ஆழத்தில் இருந்த நிலவரை சுரங்கத்தில் இருந்து, 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஒன்பது ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

Default Image
Next News

சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பூதேவி, ஸ்ரீதேவி சமேத நயினபூர்ண நாராயண பெருமாள் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. 1917ல் நடந்த கும்பாபிஷேக விழாவுக்கு பின், பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. சிவன் மற்றும் பெருமாள் கோவிலை புனரமைப்பு செய்வதில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெருமாள் கோவிலின் வடகிழக்கு திசையில், ஆஞ்சநேயர் சிலை அமைக்க பள்ளம் தோண்டினர். 5 அடி ஆழத்தில் பலகை கற்கள் வரிசையாகவும், சிறிய வழிப்பாதை இருந்ததை பார்த்தனர். அந்த பாதையில் இறங்கி பார்த்த போது 8 அடி அகலம் 8 அடி நீளத்தில், சதுர வடிவில் நிலவரை சுரங்கம் இருந்தது. அந்த சுரங்கத்தினுள் 3 அடி உயரத்தில் பெருமாள்,2.75 அடி உயரம் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளும், 2 அடி உயரத்தில் விஷ்ணு, லட்சுமி, கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், பத்மாவதி தாயார் மற்றும் திருமங்கை மன்னர் ஆழ்வார் என, 9 ஐம்பொன் உலோக சிலைகள் வரிசையாக இருந்தன. ஆத்துார் வருவாய் துறை அதிகாரிகள், நிலவரை சுரங்கத்தில் இருந்த ஒன்பது ஐம்பொன் உலோக சிலைகளை மீட்டனர்.

இது குறித்து, சேலம் வரலாற்று மைய கல்வெட்டு வரலாற்று ஆய்வாளர்கள் பி.வீரராகவன், பொன்.வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், நிலவரை சுரங்கத்தில் இருந்து முதன்முறையாக, உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 14, 15ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசு மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில், கலைநயமிக்க உலோக சிலைகளை செய்து நிலவரை சுரங்கத்தில் பாதுகாத்து வந்துள்ளனர். பெருமாள் கோவிலில் ராமானுஜர் சிலை இருக்கும். இங்கு, 12 ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை மன்னர் ஆழ்வார் சிலை உள்ளது அரியதாகும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி திருமலையில் நான்கு நாட்கள் நடைபெற்று வந்த சங்கோபங்க ஸ்ரீ ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோபுர ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை, குறிஞ்சேரியில் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் கும்பாபிகும்பாபிஷேகம் இன்று சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar