Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் நிலவரை சுரங்கத்தில் 9 ஐம்பொன் ... பாலமேடு முத்தாலம்மன் கோயில் விழா பாலமேடு முத்தாலம்மன் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு : அறநிலையத்துறை புதிய உத்தரவு
எழுத்தின் அளவு:
கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு : அறநிலையத்துறை புதிய உத்தரவு

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2017
11:07

கோவை: கோவை மண்டலத்தில், கோயில் சொத்துக்களை மீட்டு, அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் அடங்கிய கோவை அறநிலையத் துறை மண்டலத்தில், பட்டியல் சார்ந்த மற்றும் சாராத, 3,000த்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

இக்கோயில்களுக்கு, நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள், கடைகள் உள்ளிட்ட ஏராளமான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவற்றை பலரும் ஆக்கிரமிப்பு செய்து, வர்த்தகம் செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால், கோயில் செயல் அலுவலர், அறநிலையத் துறை சட்டவிதிமுறை, 78ன் படி நோட்டீஸ் கொடுத்து, வழக்கு தொடர்வார். அறநிலையத் துறை இணை கமிஷனர் கோர்ட்டில், விசாரணை நடைபெறும். இங்கு பிறப்பிக்கப்படும் தீர்ப்பை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அதை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல், காலதாமதப்படுத்தி, ஆக்கிரமிப்பாளரிடம் கையூட்டு பெற்று, கடையையோ, நில புலன்களை தொடர்ந்து அனுபவிக்கவோ, சில செயல் அலுவலர்கள் அனுமதிக்கின்றனர். இதனால், கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இப்பிரச்கைளுக்கு தீர்வு காண, கோவை மண்டல அறநிலையத் துறை இணை கமிஷனர் அலுவலகம், தன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பட்டியல் சார்ந்த மற்றும் சாராத கோயில் செயல் அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், ’தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கடை, நன்செய் மற்றும் புன்செய் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, கோயிலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இதற்கான பணிகளை வேகப்படுத்த வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 
temple news
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar