பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
05:07
போடி: ஆடி அமாவாசையை முன்னிட்டு போடி அருகே பிச்சாங்கரை ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் அன்னதானம் நடந்தது. போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோச பூஜைகளும் நடந்து வருகின்றன. இங்கு வேண்டி வணங்கினால் கால சர்ப்ப தோஷம், ராகு, கேது நிவர்த்தி, திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது என்பது ஐதீகம். நேற்று ஆடி ஆடி அமாவாசையை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரதனைகள் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. சிவனுக்கு சிறப்பு அலங்காரங்களை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார். விழாவினையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் மற்றும் திருப்பணி டிரஸ்ட் நிர்வாத்தினர் செய்திருந்தனர்.
* மேலச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரதனைகள் நடந்தன.
* போடி பரமசிவன் கோயிலில் ஆடி அமாவாசை பூஜை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.
* கொண்ரங்கி மல்லைய சுவாமி கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்கதர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.
* ஆடி வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாசப்பெருமாள், பத்மாவதியின் அருள்ஆசி பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை பட்டாச்சாரியார் கார்த்திக் செய்திருந்தார்.