மனிதர்கள் செய்யும் எல்லா குற்றங்களுக்கும் பரிகாரம் உண்டு. ஆனால், கெட்ட குணத்திற்கு மட்டும் பரிகாரம் இல்லை, என்கிறார் நபிகள் நாயகம். தொற்று நோய் போன்றது கெட்ட குணம். ஒரு குணத்தை விட்டால் இன்னொன்று தொற்றிக் கொள்ளும். நம்மிடமுள்ள கெட்ட குணங்களை அடையாளம் தெரிந்து தூக்கி எறிந்து விட வேண்டும். இவற்றை உள்ளடக்கிக் கொண்டு, இறைவனைத் தொழுவதால் எந்தப்பயனும் கிடைக்காது.