Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடியேற்றத்துடன் துவங்கிய ... திருமலையில் ஆயிரம் கால் மண்டபம் அரசை எதிர்த்து சின்ன ஜீயர் பாதயாத்திரை திருமலையில் ஆயிரம் கால் மண்டபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புராதன கோவில்களை சுற்றி விதிமீறல் கட்டடங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 நவ
2011
11:11

திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் உள்ள 38 புராதன கோவில்கள் அருகே, விதிமுறைகளை மீறிய கட்டடங்களை அகற்றும் உத்தரவின் கெடு முடிந்தும், நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அதிகாரிகள் தயக்கத்தின் உள்ளனர். தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் என, தமிழகம் முழுவதும் 38 கோவில்கள் புராதன கோவில்களாக உள்ளன. தூரத்தில் இருந்து பார்த்தாலும் கோபுர தரிசனம் தெரிய வேண்டும் என்ற நோக்கிலும், கோவில்களுக்கு அருகே பெரிய கட்டங்கள் கட்டினால் கோவில்களின் அழகு மறைக்கப்படும் என்பதாலும் கடந்த 1997ல் தமிழக அரசு, உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்படி, கோவிலில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவிற்குள் கட்டப்படும் கட்டடங்களின் உயரம் தரைத்தளம், முதல் தளத்தைச் சேர்த்து 9 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், 1997ம் ஆண்டிலேயே இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும், அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டுவோர்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டி வந்தால், அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டி வரும் என்று கூறப்பட்டது. அகற்றாமல் இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுத்து அகற்றுவோம் என்றும் கூறினர். இந்த உத்தரவு வழங்கப்பட்டு ஏழு நாட்களுக்குள், கட்டடத்தை அகற்ற வேண்டும் என்று மிரட்டியதோடு சரி. ஆனால், இந்த நோட்டீஸ், கட்டட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கட்டட உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 97ம் ஆண்டிலேயே இந்த உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில், 97க்கு பிறகும் கூட புதிய கட்டடங்கள், கோவில் கோபுரத்தை மறைக்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளன என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar