Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்ணீர் வசதி இல்லாததால் ரயிலை ... எல்க்ஹில் முருகன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தருக்கு மொட்டை: முடி காணிக்கையில் கை வைக்கும் நிர்வாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2011
11:11

ஈரோடு: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், முடி காணிக்கைக்கு, 50 ரூபாய் வசூலிக்கப்படுவதால், பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பிரபலமான ஆன்மிக சுற்றுலாத் தலங்களில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். தினமும் பல்வேறு தோஷங்கள் கழிக்கவும், பித்ரு தர்ப்பணம், திதி காரியம் செய்யவும், பரிகாரங்கள் செய்யவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பவானி கூடுதுறையில் பக்தர்கள் குவிகின்றனர். வேண்டுதலுக்காகவும், முடி காணிக்கை செய்வோருக்கும், திதிக்காக மொட்டை அடிப்பவருக்கும் ஏதுவாக, கோவில் வளாகத்துக்குள் முடி காணிக்கை செய்ய வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில், ஐந்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, முடி காணிக்கை செய்ய வரும் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கின்றனர். மொட்டை அடிக்க 10 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், சங்கமேஸ்வரர் கோவிலில் முடி காணிக்கைக்கு, 50 ரூபாயும், சவரம் செய்ய, 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. "பொதுவாக கோவிலில் முடி காணிக்கை செய்ய குறைவான பணமே வசூலிக்கப்படும். ஆனால், சங்கமேஸ்வரர் கோவிலில், சலூன் கடைக்கு நிகராக பணம் வாங்கப்படுவது கண்டிக்கதக்கது. கோவில் நிர்வாகமும் இக்கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது என, பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். கோவில் நிர்வாக அலுவலர் நடராஜ் கூறுகையில், ""முடி காணிக்கைக்கு 10 ரூபாய் மட்டுமே வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கு மேல் வசூலிப்பதாக, பக்தர்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. முடி காணிக்கைக்கு அதிகமான தொகை வசூலிக்கப்பட்டால், நிர்வாகத்தில் பக்தர்கள் புகார் செய்யலாம். அதிக தொகையை வசூலிப்பவர்கள் மீது, கோவில் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar