Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டை கோயில்களில் ... ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவக்கம் ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்
எழுத்தின் அளவு:
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்

பதிவு செய்த நாள்

26 ஆக
2017
11:08

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சதுர்த்தி விழா ஆக.16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் எட்டாம் நாளில் சித்தி, புத்தி தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து திருமணக் கோலத்தில் விநாயகர் இரு தேவியருடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து மறு நாள் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று சதுர்த்தி தீர்த்தவாரியை முன்னிட்டு உப்பூர் மோர்பண்ணை கடலில் பக்தர்களுடன் விநாயகர் புனித நீராடினார். அதைத்தொடர்ந்து, காலை 10:05 மணிக்கு கடற்கரையில் இருந்து சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விநாயகர் வெள்ளி சப்தாவர்ணம் ( காளை வாகனம்) வாகனத்தில் பக்தர்களுடன் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தார்.

அதைத் தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் கோயில் முன்பு பால்குடம் மற்றும் காவடியுடன் தீ மிதித்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர். விழாவில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மகேந்திரன், திருவாடானை பொறுப்பாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வ.து.ந.ஆனந்த், வி.ஏ.ஓ., சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கடலுார் முன்னாள் ஊராட்சி தலைவர் குஞ்சரம் கிருஷ்ணன், சித்துார்வாடி முன்னாள் ஊராட்சி தலைவர் வாசுதேவன், உப்பூர் குமரையா அம்பலம், டோனி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகி முனியாண்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar