பதிவு செய்த நாள்
05
செப்
2017
12:09
பெருந்துறை: தோட்டாணி பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடந்தது. பெருந்துறை அடுத்த திருவாச்சி ஊராட்சி, சின்னியம்பாளையம், தோட்டாணி பகுதியில், சீதேவி, பூதேவி சமேத சுயம்பு கரியபெருமாள் கோவில், கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் ஜீயர், ரங்கநாராயண சுவாமிகள் விழாவுக்கு தலைமை வகித்தார். திருமலை பட்டாச்சாரியார், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். அப்போது இரண்டு கருடன்கள், கலசங்களைச் சுற்றி வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். மாலையில், திருக்கல்யாண உற்சவம் மற்றும் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவில், பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
* பெருந்துறை, கம்புளியம்பட்டி ஊராட்சி, பள்ளக்காட்டூர், செல்வவிநாயகர் மற்றும் சம்பா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. வேலுமணி சிவாச்சாரியார், கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.