மயிலம் : திருவக்கரையில் வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது. மயிலம் அடுத்த வக்ரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜப் பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலிமாமுனி, வக்ரகாளியம்மன், வக்ர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.