ஏழை காத்தம்மன் கோயில் விழா: மதுக்கலயம் ஏந்தி பெண்கள் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2017 11:09
மேலுார்: மேலுார் வெள்ளலுாரில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் திருவிழாவில் பெண்கள் மதுக்கலயம் ஏந்தியும், வைக்கோல்பிரி சுற்றியும் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
மதுரை மேலுாரை அடுத்து வெள்ளலுார் அருகே கோயில் பட்டியில் ஏழை காத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவை முன்னிட்டு 60 கிராமங்களை சேர்ந்த 7 குழந்தைகள் செப். 12ல் தேர்வு செய்யப்பட்டு வெள்ளலுார் கோயில் வீட்டில் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தனர். நேற்று வெள்ளலுார் கோயில் வீட்டில் இருந்து 11 பிரிவுகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள் மற்றும் இளங்கச்சிகள் தலைமையில் (இளைஞர்கள்) 8 கி.மீ., தொலைவில் உள்ள கோயில்பட்டி ஏழை காத்தம்மன் கோயிலுக்கு நடந்து சென்றனர்.
அதற்கு முன்பாக பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியில்லாமல் வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல்பிரி சுற்றியும், குழந்தை வரம் கேட்டவர்கள் பதுமைகள் மற்றும் பூக்கொடைகளை சுமந்து சென்று நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பூஜாரி சின்னதம்பி தலைமையில் அம்மனாக பாவிக்கும் ஏழு குழந்தைகள் மாலை மரியாதையுடன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்னர்.