பதிவு செய்த நாள்
27
செப்
2017
11:09
திருப்பூர் : தசரா விழாவை முன்னிட்டு, திருப்பூரில், கர்பா தாண்டியா நடனம் ஆடி, குஜராத் சமாஜம் சார்பில் வழிபாடு நடத்தப்பட்டது. திருப்பூரில், 1930ம் ஆண்டு முதல், குஜராத் சமாஜம் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பில், ஆண்டு தோறும் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தசரா விழா, கடந்த, 21ல் துவங்கியது. இதை முன்னிட்டு, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குஜராத்தி மண்டபத்தில், துர்க்கா உள்ளிட்ட தெய்வங்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள், வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தசரா விழாவின் ஒருபகுதியாக, அச்சமூகத்தை சேர்ந்த பெண்கள், கர்பா தாண்டியா எனும் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இதில், குஜராத் சமாஜம் தலைவர் பிரவீன் ராஜ், துணை தலைவர் சுரேஷ் விபாக்கர், செயலாளர்கள் நாராயண்வானி, பிரகாஷ் சஞ்சாரியா, பரத் பூஜாரா உட்பட, 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இவ்விழா, வரும், 30ம் தேதி வரை நடக்கிறது.