பதிவு செய்த நாள்
28
அக்
2017
11:10
திருவள்ளூர் : திருவள்ளூர் படவேட்டம்மன் கோவிலில் நேற்று, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருவள்ளூர் பெரும்பாக்கம் கிராமத்தில், சித்தி விநாயகர், தேவி படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, புதிதாக கோபுரம் கட்டப்பட்டு உள்ளது.திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேக விழா, 26ம் தேதி யாக பூஜையுடன் துவங்கியது.நேற்று காலை, மூன்றாம் கால யாகபூஜை மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, உபச்சார யாத்ராதானம், குடம் புறப்பாடுக்கு பின், 10:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.பெரும்பாக்கம், நேதாஜி சாலை, திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, திரளானோர் பங்கேற்றனர். மாலை, வீதியுலாவில் அம்மனை தரிசித்தனர்.