Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பமேளா திருவிழாவுக்கு யுனெஸ்கோ ... வைத்தியநாத சுவாமி கோவிலில் கலசாபிஷேக பெருவிழா வைத்தியநாத சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
15 ஆண்டிற்குப்பின்.. வங்கி லாக்கரில் இருந்த முருகன் தங்கக் கவசம் மீட்பு
எழுத்தின் அளவு:
15 ஆண்டிற்குப்பின்.. வங்கி லாக்கரில் இருந்த முருகன் தங்கக் கவசம் மீட்பு

பதிவு செய்த நாள்

08 டிச
2017
12:12

போடி: போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகனுக்கு அணிவிக்க வேண்டிய தங்க, வெள்ளி கவசங்களை ௧௫ ஆண்டுகளுக்கு பின், வங்கி லாக்கரில் இருந்து அறநிலையத்துறையினர் மீட்டனர்.

தேனிமாவட்டம் போடியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. ௧௫ ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் நன்கொடையாக வசூல் செய்யப்பட்ட பணம் மூலம் சுவாமிக்கு தங்கம் மற்றும் வெள்ளிக் கவசம் வாங்கப்பட்டது. இவை பரம்பரை அறங்காவலராக இருந்த ஜமின்தார் வடமலை முத்து சீல ராஜைய பாண்டியரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின் கோயில் தக்காரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கும் போது, தங்க, வெள்ளிக் கவசங்கள் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்கப்படவில்லை. இதனால் கோயில் விஷேச நாட்களில் சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அதனை போடியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா லாக்கரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வாடகை செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. தக்கார் வசம் கவசங்களை ஒப்படைக்குமாறு போடி சிங்காரவேலன் பழநி பாதயாத்திரை பேரவை குருசாமி சுருளிவேல், அறநிலையத்துறை உதவி ஆணையர், தேனி மாவட்ட கலெக்டரிடமும் புகார் செய்தார். இதன் அடிப்படையில் விசாரணை நடந்தது. மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், தேனி மாவட்ட கோயில் ஆய்வாளர் அய்யம்பெருமாள், கோயில் தக்கார் கிருஷ்ணவேணி, வி.ஏ.ஓ., அன்பழகன் ஆகியோர் நேற்று வங்கி லாக்கரில் இருந்த தங்கக் கவசம், வெள்ளி கவசம் உள்ளிட்ட பொருட்களை, பரம்பரை அறங்காவலர் முத்துவீர சுருளியம்மாள் முன்னிலையில் மீட்டனர்.

அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் கூறுகையில்:
முன்னாள் பரம்பரை அறங்காவலர் ஒப்படைக்கப்படாத தங்க, வெள்ளி கவசம் உள்ளிட்ட பொருட்கள் வங்கி லாக்கரில் இருந்து மீட்கப்பட்டது. இதில் முருகனுக்கு அணிவிக்க கூடிய இரண்டேகால் அடி உயரம், 1,970 கிராம் எடையுள்ள தங்க கவசம் மற்றும் வெள்ளி கவசங்களும் வைக்கப்பட்டிருந்தன. மேல் விசாரணை நடக்கிறது. விசேஷ நாட்களில் கவசங்கள் சுவாமிக்கு அணிவிக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar