பதிவு செய்த நாள்
19
டிச
2017
12:12
உடுமலை: உடுமலை, ஆர்.கே.ஆர்., வீதியிலுள்ள ஐயப்பன் கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி, மண்டல பூஜை நடந்தது. ஐயப்பசுவாமி பக்தர்கள் சங்கத்தின் சார்பில் இவ்விழா காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.காலை, 5:30 மணிக்கு, வரசித்தி விநாயகர், ஐயப்ப சுவாமி, மஞ்சமாதா, பாலசுப்ரமணியசுவாமி, நவக்கிரகங்களுக்கும், சிறப்பு அபிேஷக அலங்கார பூஜையும், காலை, 9:00 மணிக்கு, செண்ட மேளம், வாணவேடிக்கையுடன், யானை வாகனத்தில், ஐயப்பன் திருவீதி உலா நடந்தது.