Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் கோயிலில் சனிப்பெயர்ச்சி ... தர்மபுரி, கிருஷ்ணகிரி கோவில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை தர்மபுரி, கிருஷ்ணகிரி கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்: சேலம் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்: சேலம் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

20 டிச
2017
12:12

சேலம்: சனிப்பெயர்ச்சியையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பரிகார பூஜை நடந்தது. அதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சனிபகவான், விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு கணபதி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்து, விசேஷ அபி?ஷகம் நடந்தது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, வாசவி மஹால், வாய்க்கால்பட்டறையில் உள்ள சுபமுகூர்த்த மண்டபம் ஆகிய இடங்களில், சனிப் பெயர்ச்சி சிறப்பு யாகம் நடந்தது. அதில், ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு, சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து, சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

* உத்தமசோழபுரம், கரபுர நாதர் கோவிலில், கரடிசித்தர் சன்னதி முன், காலை, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு பூஜை நடந்தது. பின், 108 முலிகைகளால், பரிகார யாகம் நடந்தது. அதில், 27 நட்சத்திரக்காரர்கள் பங்கேற்றனர். அதேபோல், சேலம், ஸ்வர்ணபுரியில் உள்ள ஸ்வர்ண விநாயகர், ரெட்டியூர் சூட்சம மஹாசக்தி காளியம்மன், அடிவாரம் பஞ்சமுக விநாயகர், மல்லூர் கோட்டைமேடு சனிபகவான், ஓமலூர் காசி விஸ்வநாதர், தாரமங்கலம் கைலாசநாதர், வாழப்பாடி காசிவிஸ்வநாதர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், தலைவாசல், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

சங்ககிரி சோமேஸ்வரர் கோவிலில், சந்தோஷ சனீஸ்வரர் துணைவியார் நீலாதேவியுடன் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் குமரேசன், ஆர்.டி.ஓ., ராமதுரைமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடக்கும் என, பக்தர்கள் கேள்வி எழுப்பினர். ’சில திருப்பணிகளை முடித்து, விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும்’ என, வரதராஜன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar