சீர்காழி திருவிக்கிரமப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2017 10:12
மயிலாடுதுறை: சீர்காழி திருவிக்கிரமப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அவ்வழியே ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28வது தலமான ஸ்ரீ திருவிக்கிரமப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு இன்று அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தாயாருடன் ரத்திண அங்கி அலங்கார த்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருள திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. அதனையடுத்து 5:30மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அவ்வழியே ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பெருமாள் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக் தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியையும் கண்டு சேவித்தனர்.