Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாம்பரநாதர் கோவில் தேரை ... ஆரியங்காவில் நாளை! ஆரியங்காவில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காதலை சேர்த்து வை.. மாமியார் வாயை பூட்டி வை... : முனியப்பன் சாமிக்கு 2 லட்சம் மனுக்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 டிச
2011
12:12

சேலம் : காதலை சேர்த்து வை... மாமியார், நாத்தனார் வாயை பூட்டி வை... என, சேலம் பூட்டு முனியப்பனுக்கு, இரண்டு லட்சம் மனுக்களை பக்தர்கள் போட்டுள்ளனர். சேலம் - ஏற்காடு சாலையில், அஸ்தம்பட்டியில், கலெக்டர் பங்களா முன், அய்யந்திருமாளிகை குடியிருப்பு நுழைவாயிலில், "பூட்டு முனியப்பன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில், "பூட்டு போட்டு, வழிபடும் முறையால் தான் பிரபலமானது. பூட்டு முனியப்பன் சாமி பிரபலமானதால், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் குவிந்தனர். ஆடு, கோழி வெட்டி பலியிட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூட்டு போட்டனர். நாளடைவில், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை மற்றும் கர்நாடகா, கேரள மாநில பக்தர்களும் வருகின்றனர். முதலில், ஆலங்குட்டை முனியப்பன் என்று தான், பக்தர்கள் அழைத்தனர். பின்னர் தான் பூட்டு முனியப்பன் என்று பெயர் மாறியது. ஆலங்குட்டை முனியப்பன், பூட்டு முனியப்பன் ஆனதற்கு காரணம், தேர்வில் பாஸ் ஆன, 2 மாணவியர், வேண்டுதல்படி போட்ட பூட்டு தான் காரணம். பின், மற்றவர்களுக்கும், "பூட்டு வழிபாடு பிடித்துப் போனது. தினமும் காலை, 6 மணி முதல், மாலை 6 மணிவரை கோவில் திறந்து இருக்கும். பூஜை பொருட்களுக்கு, 100 ரூபாய் செலவாகும். பூஜை பொருட்களையம், பூட்டையும் கொடுத்தால், சாமி முன் வைத்து, பூஜை துவங்கும். பின், பூட்டில் பெயர் எழுதி, மனுவையும் சேர்த்து, பிளாஸ்டிக் கவரில் போட்டு கம்பியில் பூட்டுவர். சாவியை, எடுத்துச்சென்று விடுவர். 30 நாள் கழித்து, வேண்டுதல் நிறைவேறினால், பூட்டில் தங்கள் பெயரை சரிபார்த்து, திறந்து, தொட்டியில் போட்டு விடுவர்.

பூசாரி கிருஷ்ணன் கூறியதாவது: சுயம்புவாக உருவான, அரையடி முனியப்பன் சிலை தான் மூலவர். குழந்தை பாக்கியம், வேலை, நோய் குணமாக பூட்டு போடுகின்றனர். குடும்பத்தில் மாமியார், மருமகள் தகராறு சகஜம். மாமியார் வாயை கட்டி வை... என்று மருமகள், கோவிலில் பூட்டு போடுவார். கடந்த இரண்டு ஆண்டில் மட்டும், 2 லட்சம் பூட்டு மனுக்கள் வந்துள்ளன. இவ்வாறு பூசாரி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ், ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ பத்தாம் ... மேலும்
 
temple news
 சென்னை: மாசி மக தீர்த்தவாரி உத்சவம் மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar