Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் ... திண்டுக்கல் அருகே 700 ஆண்டுகள் பழமையான சிவன்கோயில் கண்டுபிடிப்பு திண்டுக்கல் அருகே 700 ஆண்டுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை அம்மன் கோயிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் லீலை
எழுத்தின் அளவு:
மானாமதுரை அம்மன் கோயிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் லீலை

பதிவு செய்த நாள்

10 ஜன
2018
11:01

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர்கோயிலில் உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி சுவாமி படியளக்கும் லீலை  கொண்டாடப்பட்டது. சிவன் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நேற்று மார்கழி அஷ்டமி திதி என்பதால் அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிக்குப்பின் ஆனந்தவல்லி, சோமநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை செய்யப்பட்டு ரிஷப வாகனத்தில் சோமநாதர் பிரியாவிடையுடனும், ஆனந்தவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் திருமண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் அஷ்டமி சப்பரத்தில் ஆனந்தவல்லியும், சோமநாதசுவாமி பிரியாவிடையும் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி  உலா வந்த போது பக்தர்கள் ஜீவராசிகளுக்கு உணவளிக்கும் வகையில் அரிசி, நவதானியங்களை துாவியபடி சென்றனர்.பலர் இதனை பிரசாதமாக எடுத்துச் சென்றனர். சிறப்பு பூஜைகளை அழகியசுந்தரபட்டர், தெய்வசிகாமணிபட்டர் தலைமையில் சண்முகசுந்தரபட்டர், மணிக்குமார்பட்டர், சோமாஸ்கந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

தேவகோட்டை: தேவகோட்டையில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் , மற்றும் மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், சன்டிகேஸ்வரர் உட்பட சர்வ அலங்காரத்தில் நகர முக்கிய வீதிகளில் வலம் வந்து படிஅளக்கும் நிகழ்ச்சி நடந்தது.  தேவார,திருவாசகம் பாடல்கள் பாடிய படி உலா வந்த சுவாமிகள் கோயிலை வந்தடைந்தவுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன.

காரைக்குடி: காரைக்குடி நகர சிவன் கோயிலிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் அம்பாள் சகிதம் சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கும் நிகழ்ச்சி  நடந்தது. சுவாமி, அம்பாள், அம்மன், சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகன் ஆகியோர் கோயிலிலிருந்து புறப்பட்டு சி.மெ.வீதி, பெருமாள் கோயில் வீதி, கீழ ஊரணி, எஸ்.ஆர்.எம்., வீதி, மேல மடம், தேரோடும் வீதி வழியாக கொப்புடையம்மன் கோயிலை சென்றடைந்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. மாலையில் புறப்பட்ட சுவாமிகள் முத்தாலம்மன் கோயில் வழியாக நகர சிவன் கோயிலை வந்தடைந்தனர்.  வழி நெடுகிலும் பக்தர்களுக்கு சுவாமி படியளந்த அரிசி வழங்கப்பட்டது. பக்தர்கள் பட்டாடை சார்த்தி சுவாமி, அம்பாளை வழிபட்டனர். ஏற்பாடுகளை காரைக்குடி நகர சிவன் கோயில் டிரஸ்டிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar