Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் ... திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் இன்று தெப்ப உற்சவம் திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தைப்பூச தேரோட்டம் : 60 ஆண்டுகளுக்கு பின் காலையில் நடந்தது
எழுத்தின் அளவு:
பழநியில் தைப்பூச தேரோட்டம் : 60 ஆண்டுகளுக்கு பின் காலையில் நடந்தது

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
12:02

பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு பழநி முருகன்கோயிலில் வழக்கமாக மாலையில் நடக்கும் தேரோட்டம், சந்திரகிரகணத்தால் காலையில் நடந்தது. பழநி முருகன்கோயில் தைப்பூசவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜன.,25 துவங்கி பிப்.,3 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்றுமுன்தினம் இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. நேற்று ரதவீதியில் காலை 10:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருத்தேரேற்றம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 10:40 மணிக்கு, நான்கு ரதவீதிகளில் தேரோட்டம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு தேர்நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். தைப்பூசவிழாவில் இன்று இரவு 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, தங்கக்குதிரை வாகனத்தில் திருவுலா நடக்கிறது. பிப்.,3 இரவு 7:00 மணி தெப்ப உற்சவத்துடன் தைப்பூசவிழா முடிகிறது. தேரோட்டத்தில் சித்தனாதன் சிவனேசன், வடக்குகிரிவீதி கந்தவிலாஸ் செல்வகுமார், கண்பத் கிராண்ட் ஹரிகரமுத்து, சரவண பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் பங்கேற்றனர்.

கஸ்துாரியை தேடிய பக்தர்கள் : பழநி கோயில் யானை கஸ்துாரி, கோவை புத்துணர்வு முகாமிற்கு சென்றுள்ளது. அதற்கு பதிலாக பழநி கோயில் கல்லுாரி என்.என்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் தேரோட்டம் நடந்தது. மாரியம்மன் கோயில் அருகே மேடான பகுதிகளில் தேரை நகர்த்த பக்தர்கள் சிரமப்பட்டனர். கஸ்துாரி யானை இருந்தால் தேரை தள்ளிவிடும்.

அறுபது ஆண்டுக்குப்பின் : ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேரோட்டம் பெரியநாயகி அம்மன் கோயிலில் மாலை 4:00 மணிக்கு நடக்கும். இந்ததாண்டு தைப்பூச நாளின் மாலையில் சந்திரகிரகணம் ஏற்பட்டதால், தேரோட்டம் காலையில் மாற்றப்பட்டது. இதே போல 60ஆண்டுகளுக்கு முன் காலையில் தேரோட்டம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஆடிப்பெருக்கு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து ... மேலும்
 
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 
temple news
ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் ... மேலும்
 
temple news
கோவை ; டி பெருக்கை  முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ வித்யா ஹோமம், மஹன்யாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar