மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் கரும்பு தொட்டில் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2018 11:02
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கரும்பில் குழந்தைக்கு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசித்தி பெற்ற இக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப். 13 ல் துவங்கி பிப்.17 வரை நடக்கிறது. இதற்காக ஜன. 24ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. கடந்த சில நாட்களாக பக்தர்கள் மஞ்சளாற்றிற்கு சென்று சுந்தரவிநாயகரை வணங்கி அக்னி சட்டி எடுத்து வருகின்றனர். நேற்று காலை தேவதானப்பட்டியை சேர்ந்த பக்தர்கள் கரும்பில் குழந்தைக்கு தொட்டில் கட்டி துாக்கிச் சென்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.