Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடுவீரப்பட்டு பிரித்தியங்கரா தேவி ... கோவில் நடைபாதைக்கு துரு பிடிக்காத கம்பிகள் கோவில் நடைபாதைக்கு துரு பிடிக்காத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை

பதிவு செய்த நாள்

16 பிப்
2018
12:02

செஞ்சி: ல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கியது. நேற்று மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது. காலை 10:40 மணிக்கு கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில் விஸ்வரூப கோலத்தில் அங்காளம்மன் மயானப் புறப்பாடு நடந்தது.

அம்மனுக்கு முன்னதாக பூசாரிகள் பிரம்ம கபாலத்துடன் சாமி ஆடி வந்தனர். அங்காளம்மன் மயானம் வரும் வழி நெடுகிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்கள், தானியங்களை வாரி இரைத்தனர்.11:00 மணிக்கு மயானத்தில் அங்காளம்மன் எழுந்தருளியதும், அங்கு பக்தர்கள் படையலிட்டு குவியலாக வைத்திருந்த உணவு பொருட்களை பூசாரிகளும், பொதுமக்களும் கொள்ளை விட்டனர். அப்போது பிரம்ம கபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். முக்கிய திருவிழாக்களான தீமிதி விழா, வரும் 18ம் தேதி மாலை 5:00 மணிக்கும், திருத்தேர் வடம் பிடித்தல் 20ம் தேதி மாலை 5:00 மணிக்கும் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar