Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்காமீஸ்வரர் கோவில் தேர் தயார் ... சக்தி விநாயகர் கோவிலில் 108 செவ்விளநீர் அபிஷேகம் சக்தி விநாயகர் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாதாதீஸ்வரர் கோவில் குளம் புனரமைப்பு
எழுத்தின் அளவு:
நாதாதீஸ்வரர் கோவில் குளம் புனரமைப்பு

பதிவு செய்த நாள்

22 மே
2018
01:05

பள்ளிப்பட்டு: பழமையான கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என்ற, பக்தர்களின் கோரிக்கையையடுத்து, சீரமைப்பு பணி நடக்கிறது. படித்துறையை ஒழுங்குபடுத்தும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிப்பட்டு ஒன்றியம், கரிம்பேடு கிராமத்தில், கொற்றலை ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வரர் கோவில்.மிகவும் விஸ்தீரனமான இந்த கோவிலின் எதிரே, மிகப்பெரிய குளம் உள்ளது.

திருமண வைபவங்கள்: வடக்கில் மலையும், தெற்கில் கொற்றலை ஆற்றையும் அரண்களாக கொண்ட இந்த குளம், ஆண்டு முழுவதும் நீர் நிறைந்து காணப்படும். அதில், எப்போது அல்லியும், தாமரையும் மலர்ந்திருக்கும் என்பதுa மேலும் சிறப்பு. நகரி – பள்ளிப்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், கோவிலின் பெருமை கருதி, பலரும் இங்கு திருமண வைபவங்களை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் பலரும் திருமணங்களை நடத்த முன்வரும் பட்சத்தில், மண்டப இடவசதி போதுமானதாக இருப்பது இல்லை. இதை கருத்தில் கொண்டு, 1970களில், குளக்கரையில் புதிய திருமண கூடம் கட்டப்பட்டது. இது தவிர, கிராமத்தில், பல்வேறு தனியார் திருமண மண்டபங்களும் அமைந்துள்ளன. மாவட்டத்தின் கோவில் நகரமான திருத்தணிக்கு அடுத்தபடியாக, அதன் இணை கோவிலான நாதாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள கரிம்பேடும், திருமண தலமாக புகழ்பெற்றுள்ளது.

28 லட்சம் ரூபாய்: இந்நிலையில், கோவில் குளம் பல ஆண்டுகளாக துார் வாரி சீரமைக்கப்படாததால், பக்தர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். குளத்தில் தேங்கிய பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை வருவது குறித்து நமது நாளிதழில் பல முறை செய்தி வெளியாகி உள்ளது. இதையடுத்து, குளக்கரைக்கு கம்பி வேலி அமைத்து, பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. தற்போது, குளத்தை துார் வாரும் பணியை, திருத்தணி தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 28 லட்சம் ரூபாய் மதிப்பில், குளத்தை துார் வாருதல் மற்றும் சீரழிந்து கிடக்கும் படித்துறையை புதுப்பிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, குளத்தில் பம்ப் செட் அமைத்து, தண்ணீரை வெறியேற்றுதல் மற்றும் தாமரைகளை அகற்றும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி சன்னதியில் ஐப்பசி பவுர்ணமியை ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்; வருகிற 12ம் தேதி ஜென்மாஷ்டமி விழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
பகவானின் தரிசனத்தை அடைய தேவையான தகுதி என்ன? பகவான் இன்று நம்மை அன்புடன் விளக்கி ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar