Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி பிறப்பு: தர்மபுரி அம்மன் ... அம்மனுக்கு உகந்த ஆடி மாத பிறப்பு: தேங்காய் சுட்டு கொண்டாடிய மக்கள் அம்மனுக்கு உகந்த ஆடி மாத பிறப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாதப்பிறப்பு: சோழீஸ்வரருக்கு 1,008 குட தீர்த்த அபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஆடி மாதப்பிறப்பு: சோழீஸ்வரருக்கு 1,008 குட தீர்த்த அபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2018
12:07

ஈரோடு: தட்சிணாயன புண்ணிய காலமான, ஆடி மாதம் நேற்று பிறந்தது. ஈரோடு, கருங்கல்பாளையம், காவிரிக்கரை, சுந்தரவல்லி உடனுறை சோழீஸ்வரர் கோவிலில், வில்வ லிங்கம் மற்றும் மூலவருக்கு, 1,008 குடம் தீர்த்த நீரில் அபி?ஷகம் நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து, கோவில் வரை, வரிசையாக நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆற்றிலிருந்து ஒருவர் கைமாற்றி ஒருவராக, தீர்த்தம் எடுத்துக் கொடுக்க, சிவாச்சாரியார்கள் அபி?ஷகம் செய்தனர். அதைத் தொடர்ந்து, பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபி?ஷகம், மஹா தீபாராதனை நடந்தது. இதேபோல் மாநகரில் காவிரிக்கரை கன்னிமார் கருப்பண்ணசாமி கோவில், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், வலசு மாரியம்மன், சத்திரம் மாரியம்மன், கருங்கல்பாளையம் மாரியம்மன், கொங்கலம்மன், கள்ளுக்கடை மேடு காளியம்மன், திருவள்ளுவர் வீதி பொட்டு அம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனால், அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

கூடுதுறை வெறிச்: பவானி சங்கமேஸ்வரர் கோவில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற, பரிகார தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் ஆடி மாத பிறப்பான நேற்று, பக்தர்கள் கூட்டம், குறைவாகவே காணப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து, காவிரி ஆற்றில், குடிநீருக்காக விநாடிக்கு, 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலேயே வந்த பக்தர்கள், ஆற்றில் புனித நீராடினர். சங்கமேஸ்வரர், வேதநாயகி, பெருமாள் சன்னதிகளில் தரிசனம் செய்து, வழிபட்டனர். அதேபோல், புதுமண தம்பதியரை காண்பதும் அரிதாக இருந்தது. வரும் ஆடி அமாவாசை, ஆடி, 18 நாட்களில், கூட்டம் அதிக அளவில் வருமென, பக்தர்கள் கூறினர்.

கோபி கோவில்களில் சிறப்பு வழிபாடு: பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், வழக்கத்தை விட, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்தனர். இதேபோல், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சிறப்பு அபி?ஷகம், தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar