பழநி ‛வின்ச்‛சில் 2 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2018 11:07
பழநி: ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் காவடியெடுத்து, அலகு குத்தியும் வந்தனர். ரோப்கார் நிறுத்தம் காரணமாக, வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் காத்திருந்தனர். பழநி முருகன் மலைக்கோயிலுக்குதினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நேற்று ஞாயிறு அன்றுஅதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், ‘ரோப்கார்’ நிறுத்தம் காரணமாக, வின்ச் மூலம் மலைக்கு செல்வதற்கு இரண்டு மணிநேரம் காத்திருந்தனர். பொதுதரிசனம் வழியில் ஒருமணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். ஈரோட்டைச் சேர்ந்த பக்தர்கள் உடலில்அலகு குத்தியும், காவடிகள் எடுத்துகிரிவீதியை வலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேப்போல இரவு தங்கரதப்புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.