ஒரு ஆஸ்திகரிடம் நாத்திக நண்பர், ’கடவுள் இருக்கிறார் என்கிறீர்களே! அவரை நேரில் பார்த்ததுண்டா?’ என்று கேட்டார். அதற்கு ஆஸ்திகர்,“நீங்கள் உங்களுடைய இருதய துடிப்பை எப்போதாவது கண்டிருக்கிறீர்களா?”என்றார். அதற்கு அவர், “நான் பார்த்ததில்லை”என்றார். மீண்டும் ஆஸ்திகர் அவரிடம், “இருதய துடிப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?”என்று கேட்டார். அதற்கு அவர், “ஆம், என் நெஞ்சிலே கை வைக்கும் போதெல்லாம் என் இருதயம் துடிப்பதை உணருகிறேன்”என்றார். உடனே ஆஸ்திகர், “இது போல் தான் ஆண்டவரும். அவரை நாம் கண்டதில்லை. ஆனால், அவரை உணருகிறோம். அவரை ருசிக்கி றோம். அவர் காணப்படாதவராக இருந்தாலும் மெய்யானவராய், உணரப்படக் கூடியவராய் இருக்கிறார். அவரே செயல்களை செய்யத் தூண்டுகிறார். நம்மை அருமையாக வழிநடத்துகிறார். கஷ்டம் வரும்போது தேற்றி ஆற்றுகிறார்” என்றார். நமக்குள்ளேயே ஆண்டவர் இருப்பதை உணருங்கள்.