Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) திறமை கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பணப்புழக்கம்
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பணப்புழக்கம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2018
04:08

உழைப்பால் வாழ்வில் உயர்ந்த மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம்  சூரியன், சுக்கிரன், குரு  ஆகியோர் மாதம் முழுவதும் சாதகமாக நின்று நற்பலன் கொடுப்பர். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எந்த செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம்.

குடும்பத்தில் மாத முற்பகுதியில் சுக்கிரனால் உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். ஆக. 31க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். செப். 4,5ல் பெண்களால் பொன், பொருள் சேரும். செப்.8,9,10ல் புத்தாடை, அணிகலன்கள் கிடைக்கலாம். விருந்து, விழா சென்று வருவீர்கள். ஆக.31, செப்.1ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். ஆனால் செப். 11,12ல் அவர்கள் வகையில் சற்று  ஒதுங்கி இருக்கவும்.

தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தொடர்ந்து அதிகமாக உழைக்க நேரிடும். அதற்கான நற்பலன் நிச்சயம் கிடைக்கும்.   புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன ஆக. 28க்கு பிறகு மறையும்.  அரசு வேலையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். ஆக. 28,29,30ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். செப்.14க்கு பிறகு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சூரிய பலத்தால் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பொருளாதார வளம் பெருகும். சேமிக்கும் விதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி முன்னேற்ற பாதையில் செல்லும். தொழில் ரீதியாக வெளியூரில் தங்க நேரிடும். ஆக.28க்கு பிறகு அரசு வகையில் தொல்லைகள் குறுக்கிடலாம். எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பகைவர்களால் இடையூறு வரலாம். ஆக.19,20, செப்.15,16ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். செப். 2,3,6,7 ல் பண விரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் குறுக்கிடலாம். சுக்கிரனால் ஆக. 31க்கு பிறகு  பொருள் லாபம் அதிகரிக்கும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆக. 31க்கு பிறகு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். செப். 14க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் காணலாம். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். மாணவர்கள் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். இருப்பினும் குருவால் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்காமல் போகாது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செப்.14க்கு பிறகு போட்டிகளில் வெற்றி காணலாம்

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். நெல், மஞ்சள், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானம் உண்டாகும். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் வரும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். செப்.14க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.

பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். ஆக. 21,22,23ல் அனுகூல பலன் காண்பீர்கள்.  சகோதரவழியில் பணஉதவி கிடைக்கும். ஆக.31க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர்.  பெண் பணியாளர்கள் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. செப். 14க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் பணி முன்னேற்றம் காண்பர்.

* நல்ல நாள்:  ஆக. 19,20,21,22,23,28, 29, 30, 31, செப்.1,4,5,8,9,10,15,16
* கவன நாள்: ஆக.24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9
* நிறம்: செந்yµம், மஞ்சள்

பரிகாரம்:
●  செவ்வாய்க்கிழமை முருகனுக்கு பால் அபி÷åPம்
●  சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
●  வெள்ளியன்று ராகுகாலத்தில் நாகதேவதை வழிபாடு

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar