பதிவு செய்த நாள்
16
ஆக
2018
04:08
பொதுநலனில் அக்கறை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
இம்மாதம் செவ்வாய், கேது சாதகமாக உள்ளனர். சுக்கிரன் ஆக.31ல் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். இதனால் பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்களை புறம் பேசியவர்களும் தவறை உணர்ந்து நெருங்கி வருவர். மனதில் அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு. குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன.
குடும்பம் வாழ்வு சீராக இருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். சுக்கிரனால் ஆடம்பர சுகம் கிடைக்கும். பணப்புழக்கத்தால் குடும்பத் தேவை பூர்த்தியாகும். அத்தியாவசிய பொருட்களுக்கு குறைவிருக்காது. ஆக. 31க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.
புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். செப். 8,9,10ல் பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். செப்.4,5ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆக.19,20, செப்.15,16 ல் உற்றார் உறவினர் வகையில் வீண் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். புதனால் ஆக.28க்கு பிறகு குடும்பத்தில் சிற்சில பிரச்னை உருவாகலாம். அண்டை வீட்டார் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சிலருக்கு பொருள் இழப்பும் வரலாம். கணவன்- மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். சனிபகவான் மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். திடீர் வெளியூர் பயணம் ஏற்பட வாய்ப்புண்டு.
பணியாளர்களில் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசு ஊழியர்களுக்கு விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். அதே நேரம் உங்கள் வேலைக்கு ஏற்ற வருமானம் நிச்சயம் கிடைக்கும். பணியிடத்தில் பொறுமை, நிதானம் பின்பற்றவும். உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் உடனுக்குடன் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஆக. 28க்கு பிறகு இடமாற்றத்தைக் காணலாம். செப். 2,3ல் எதிர்பாராத நன்மையை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செப்.14க்கு பணியிடத்தில் செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம்.
தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சுக்கிரனால் அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஆக.24,25ல் திடீர் ஆதாயம் வந்து சேரும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். நிலுவை பாக்கி வசூலாகும்.
கலைஞர்களுக்கு மாத தொடக்கத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கப் பெறுவர். ஆக.31க்கு பிறகு சக பெண் கலைஞர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. பெற்றோர், நண்பர்களின் வழிகாட்டுதல் நன்மைக்கு வழிவகுக்கும். விவசாயிகள் பழவகைகள், கீரை வகைகளில் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர். கால்நடைகள் வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் செயல்படுவர். குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமை கொள்வர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வளர்ச்சி காத்திருக்கிறது. வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஆக.31க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் நன்மை காண்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆக.17,18, செப்.13,14ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். ஆக.26,27ல் சகபணியாளர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* நல்ல நாள்: ஆக. 17,18,24,25,26,27, செப்.3,4,5,6,8,9,10,13,14
* கவன நாள்: ஆக. 28,29,30 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: வெள்ளை,சிவப்பு
பரிகாரம்:
● சனிக்கிழமையில் நவக்கிரக சன்னதியில் தீபம்
● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
● திங்கள் மாலையில் சிவனுக்கு வில்வ மாலை