Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு ... உலக நன்மைக்காக ஆதிபராசக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைவாசலில் மழை வேண்டி வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2018
12:08

தலைவாசல்: தலைவாசல் அருகே மழை வேண்டி, கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர். தலைவாசல் சுற்றுவட்டார கிராமங்களில், மழை பெய்யாததால், அதை சுற்றியுள்ள பகுதிகளில் குளம், குட்டைகள், நீரின்றி வறண்டுள்ளன. மழை வேண்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. வேப்பநத்தம் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆடிப்பட்டத்தில் விதை நடவு செய்ய, நிலத்தை உழுது, விவசாயிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆவணி மாதமே தொடங்கி விட்ட நிலையில், மழை பெய்யாததால், நடவுப்பணிகள் தாமதமாகி வந்தன. இந்நிலையில், கிராம மக்கள் கூடி, மழை பொழிய, கொடும்பாவி எரித்து வழிபாடு செய்ய முடிவெடுத்தனர். நேற்று மதியம், பாஞ்சாலியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து, சோமகாசுரன் மனைவியின் உருவ கொடும்பாவி தயார் செய்யப்பட்டது. ஊரின் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக கொண்டு சென்றதுடன், பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். அதன் பின்னர், ஊர் எல்லைக்கு வெளியே கொண்டு சென்று, அதற்கு தீ வைத்து எரித்தனர். கொடும்பாவியை எரித்த ஒரு சில நிமிடங்களிலேயே, மழை பெய்ததால், கிராம மக்கள் பரவசம் அடைந்தனர்.

வழிபாடு குறித்து பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில், மழையின்றி எப்போதெல்லாம் வறட்சி ஏற்படுகிறதோ, இது போன்று கொடும்பாவி எரித்து வழிபடுவோம். சோமகாசுரன் இருக்கிமிடத்தில், மழை பெய்யாது என்ற சாபம் உள்ளது. அதனால் அவனை விரட்ட, அவனது மனைவியை எரித்தால், அவன் ஊரை விட்டு விலகுவான் என்றும், மழை பெய்யும் என்பது ஐதீகம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar