Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி விருக்ஷ ராஜ கணபதி கோயில் ... திருவண்ணாமலை லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்திர உற்சவம் திருவண்ணாமலை லட்சுமி நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழா செப்.4ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழா செப்.4ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

01 செப்
2018
10:09

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா செப்.4ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.நகரத்தார் கோயிலான விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். செப்.,4ல் காலை மூஷிக படம் தாங்கிய கொடி திருவீதி வலம் வருதலும், கொடிமரம் அருகே உற்ஸவர் விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் எழுந்தருளலும் நடைபெறும். தொடர்ந்து கொடிப்படத்திற்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு பூஜை நடந்து கொடியேற்றம் நடைபெறும். பின்னர் விழா துவங்கி இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வருவார். தொடர்ந்து தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.,9 மாலை 5:00 மணிக்கு கஜமுகா சூரசம்ஹாரமும், செப்.,12ல் மாலை தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவர் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். பத்தாம் திருநாளான விநாயகர் சதுர்த்தியன்று காலை கோயில் குளத்தில் தீர்த்தவாரி, மதியம் திருமுக்கூரணி மோதக கொழுக்கட்டை படையல், இரவில் ஐம்பெரும் கடவுளர் வீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவடையும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு அருணாசலம் செட்டியார் மற்றும் அரிமளம் சிதம்பரம் செட்டியார் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar