Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 ... தஞ்சாவூர் பெரிய கோவிலில், 200 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை மறுநாள் (செப்., 16ல்) சபரிமலை நடை திறப்பு உணவு, குடிநீருடன் வர அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
02:09

சபரிமலை:புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை  மறுநாள்  (செப்., 16ல்)மாலை திறக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் குடிநீர், உணவுடன் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரள அடைமழையில் பம்பை உருக்குலைந்துள்ளது. நிறைபுத்தரிசி, ஆவணி மாத பூஜை, திருவோணம் பூஜைகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்காக விரதம் துவங்கியவர்கள், தொடர்ந்து விரதம் இருந்து வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட புரட்டாசி பூஜைக்கு கூட்டம் அதிகரிக்கும் என தேவசம்போர்டும் கருதுகிறது.

ஆனால் இன்னமும் மின் இணைப்பு சரியாகவில்லை. குடிநீர் ஆதாரமான குன்னாறு அணை மண் மேவி கிடப்பதால் சன்னிதானத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பாத்திரங்களில் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.

உணவும் கொண்டு செல்வது நல்லது. கழிப்பறை பிரச்னையும் உள்ளது.

பம்பையில் போலீஸ் அனுமதித்துள்ள இடத்தில் மட்டுமே குளிக்க வேண்டும். திருவேணி பாலம் வழியாக கணபதி கோயில் செல்ல வேண்டும்.

புல்மேடு பாதை பத்தணந்திட்டை- - பம்பை பாதையில் பிலாந்தோடு, கம்பகத்தும் வளைவு, மைலாடும் பாறை ஆகிய இடங்களில் 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரோடு சீரமைக்கப் படாமல் உள்ளது.

பம்பையில் பாம்புகள் அதிகரித்துள்ளன. ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும், காடுகளி லும் பக்தர்கள் செல்ல கூடாது. மணல் குவிந்துள்ள இடங்களில் புதைகுழிகள் உள்ளதால் அனுமதிக்கப் படாத இடங்களில் பக்தர்கள் செல்ல முயற்சிக்க கூடாது.பம்பை பெட்ரோல் பங்க் முதல், ஆறாட்டு கடவு வரை கல் தடுப்பு சுவர் முழுமையாக இடிந்து பம்பையாற்றில் விழுந்துள்ளது. இதனால் இந்த பகுதியிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தமிழக பக்தர்கள் குமுளி, வண்டிபெரியாறு, புல்மேடு பாதையை பயன்படுத்தலாம். இந்த பாதையை திறந்துவிட வனத்துறையிடம் தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது.பம்பை, சன்னிதானத்தின் நிலையை உணர்ந்து அதற்கேற்ப பக்தர்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட முன்னேற்பாட்டுடன் வருமாறு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; அம்மன் கோவில்களில், ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar