Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலம் முருகன் கோவிலில் இன்று மகா ... யோகி ராம்சுரத்குமார் குருமகராஜின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழா இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
11:02

குறிஞ்சிப்பாடி : வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 141வது தைப்பூச ஜோதி தரிசன விழா, நாளை 7ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு, கடந்த 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை, தருமசாலையில் மகாமந்திரமும், 2ம் தேதி முதல் நேற்று வரை, ஞானசபையில் திருஅருட்பா முற்றோதலும் நடந்தன. இன்று காலை 7.30 மணிக்கு தருமசாலை, மருதூரில் உள்ள வள்ளலார் அவதார சன்னிதி, தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி சன்னிதிகளில், அந்தந்தப் பகுதி கிராம மக்களால், சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஞானசபையில் பார்வதிபுரம், கிராம மக்கள் சார்பில் சன்மார்க்க கொடியை ஏற்றத்துடன் தைப்பூச ஜோதி தரிசன விழா துவங்குகிறது. இரவு தருமசாலை பிரசங்க மேடையில், திருஅருட்பா கருத்தரங்கம் நடக்கிறது. நாளை 7ம் தேதி காலை 6, 10, பகல் 1 மணி, இரவு 7, 10 மணிக்கும், மறுநாள் 8ம் தேதி காலை, 6 மணி ஆகிய ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. தைப்பூச ஜோதி தரிசன விழாவில், காலை 11 மணிக்கு தருமசாலை பிரசங்க மேடையில், சன்மார்க்க கருத்தரங்கம் நடக்கிறது. நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் சம்பத், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் பேசுகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம் கோட்டம் போக்குவரத்துக் கழகம் சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar