பதிவு செய்த நாள்
11
அக்
2018
12:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆ.சங்கம்பாளையம் சக்தி மில் அருகேயுள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த, 10ம் தேதி துவங்கிய விழாவில், தினமும் மாலை, 6:00 முதல், 8:00 மணி வரை சிறப்பு பூஜை மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
அம்மனுக்கு நேற்று, ராஜராஜேஸ்வரி அலங்காரம், இன்று பார்வதியின் சிவ பூஜை அலங்காரம், நாளை, 12ம் தேதி மூகாம்பிகை அலங்காரம் செய்யப்படுகிறது. வரும், 13ம் தேதி காய்கனிகளால் லட்சுமி அலங்காரம், 14ம் தேதி அர்த்தநாரீஸ்வரர், 15ம் தேதி அன்னபூரணி, 16ம் தேதி துர்க்கை, 17ம் தேதி மஹிஷாசுரமர்த்தினி, 18ம் தேதி சரஸ்வதி, 19ம் தேதி விஜயலட்சுமி அலங்கார வழிபாடு நடக்கிறது, என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா, நேற்று துவங்கி வரும், 17ம் தேதி வரை நடக்கிறது. விழாவில், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது. வால்பாறையிலுள்ள கோவில்களிலும் நவராத்திரி விழாவையொட்டி, கொலு வைத்து வழிபாடு நடக்கிறது. விழாவில், பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.