பழநி:பழநி முருகன்கோயில் உபகோயிலான கிழக்குரதவீதி மாரியம்மன் கோயிலில் வருடாபிேஷக விழா நடந்தது. இதையொட்டி மாரியம்மனுக்கு கும்பகலசம் வைத்து, விநாயகர் பூஜை, கலச பூஜை ஆகிய யாகபூஜை நடந்தது. பால்,தயிர், சந்தனம் உள்ளிட்ட 16வகை பொருட்களால் அபிேஷகம் செய்து, தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்தனர்.