பதிவு செய்த நாள்
12
நவ
2018
01:11
கல்விக்காரகனான புதன் தற்போது வக்கிரம் அடைந்து 10-ம் இடமான துலாமில் இருக்கிறார். இது சிறப்பான இடம். பெண்களால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். அவர் டிச.8ல் வக்கிர நிவர்த்தி அடைந்து விருச்சிகத்திற்கு வருகிறார். 11ம் இடமான அங்கு அவரால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். எடுத்த முயற்சி வெற்றி அடையும்.
சூரியன் 11-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இதனால் அந்தஸ்து உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். பூமிகாரகரான செவ்வாய் 2-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அக்கம்பக்கத்தினர் வகையில் தொல்லை உருவாகும். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் முன்னேற்றகரமான சம்பவங்கள் நிகழும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். டிச. 6,7ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.21,22ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. அவர்களிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்கவும்.
டிச.11,12ல் சகோதரிகள் மிகவும் அனுகூலமாக இருப்பர். பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு வீடு, மனை வாங்க யோகம் உண்டு. பணியாளர்கள் சீரான நிலையில் இருப்பர். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் முன்னேற்றமான பலன் பெறுவர். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். டிச.4,5ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் பெறும் மாதமாக இது அமையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். விரிவாக்கப்பணிக்காக விண்ணப்பித்த கடன் எளிதாக கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். டிச.7க்கு பிறகு தொழிலில் லாபம் மேலும் அதிகரிக்கும். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். நவ.25,26ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். நவ.17, டிச.8,9,10,13,14,15ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம்.
சனி, ராகுவால் வெளியூர் பயணம் ஏற்படலாம். சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறுவர். செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு.சுக்கிரன் தற்போது 10-ம் இடமான துலாமில் உள்ளதால் கலைஞர்கள் எதிரிதொல்லையைச் சந்திப்பர். மறைமுகப்போட்டி அதிகரிக்கும். சிலருக்கு அவப்பெயர் உருவாகலாம். எதிலும் சற்று பொறுமையைக் கடைபிடிக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். உங்களுக்கு வரவேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் நல்ல வளர்ச்சி உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். நண்பர்களுடன் பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபடுவர். ஆசிரியரின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும்.
விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். விடாமுயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும். முதலீடு அதிகப்படுத்தாமல் குறைந்த அளவில் பயிர் செய்வது நல்லது. கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை.
பெண்கள் குடும்ப வாழ்வில் சிறந்து விளங்குவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். குருவின் பலத்தால் பணிகள் சிறப்படையும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு பொருளாதார வளம் சிறக்கும். நவ.18,19,20ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
* நல்ல நாள்: நவ.18, 19, 20, 25, 26, 27, 28 டிச.4, 5, 6, 7, 11, 12
* கவன நாள்: நவ.29, 30 டிச.1 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3, 5
* நிறம்: மஞ்சள், பச்சை
* பரிகாரம்:
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிேஷகம்
● வெள்ளியன்று அம்மனுக்கு நெய் விளக்கு
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு