Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையத்தில் ... மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி பிரதட்சணம் விழா மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க அங்கியுடன் சபரிமலை ஐயப்பன்: இன்று மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
தங்க அங்கியுடன் சபரிமலை ஐயப்பன்: இன்று மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

27 டிச
2018
11:12

சபரிமலை, சபரிமலை மூலவருக்கு சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி நேற்று அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இன்று பகல் 12:00-க்கு மண்டலபூஜை நடக்கிறது.மண்டலபூஜைக்காக டிச. 23-ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி நேற்று பகல் 2:00மணிக்கு பம்பை வந்தது. கணபதி கோயில் முன் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. மாலை 3:30 மணிக்கு சன்னிதானத்திற்கு ஐயப்பா சேவா சங்கத்தினர் தலைச்சுமையாக எடுத்து வந்தனர். 6:00மணிக்கு சரங்குத்திக்கு வந்த அங்கிக்கு தேவசம்போர்டு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

6:25 மணிக்கு 18-ம் படி வழியாக வந்த அங்கியை தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மூலவருக்கு அங்கியை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர்கள், சங்கரதாஸ், ராதாகிருஷ்ணன், பி.ஆர்.ஓ. சுனில் கலந்து கொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர்.இன்று மண்டலபூஜைஇன்று பகல் 12:00 மணிக்கு மண்டலபூஜை நடக்கிறது. கோயில் மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜித்த கலசத்தை மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி எடுத்து வர ஊர்வலம் கோயிலை வலம் வரும். ஐயப்பனுக்கு கலச அபிஷேகம் செய்த பின்னர் தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடைபெறும்.பகல் 1:30 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11:00 மணிக்கு அடைக்கப்படும்.அதன் பின் 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். அன்று வேறு பூஜைகள் கிடையாது. 31-ம் அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து நெய்யபிஷேகம் துவங்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar