Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவர் கோவிலில் ஏகாதசி ... நாமக்கல்லில் 1.08 லட்சம் வடை தயாரிப்பு நாமக்கல்லில் 1.08 லட்சம் வடை தயாரிப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை தெப்பக்குளம் தண்ணீர் இயற்கை முறையில் சுத்திகரிப்பு
எழுத்தின் அளவு:
மதுரை தெப்பக்குளம் தண்ணீர் இயற்கை முறையில் சுத்திகரிப்பு

பதிவு செய்த நாள்

03 ஜன
2019
12:01

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவையொட்டி தண்ணீர் நிரப்பப்பட்டு முதன்முறையாக இயற்கை முறையில் சுத்திகரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

தெப்பக்குளம் 950 அடி நீளம், 1,000 அடி அகலம் மற்றும் 17 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆண்டு தோறும் தைப்பூச தெப்பத்திருவிழா மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் அலங்கார மிதவை சப்பரத்தில் எழுந்தருளுவர். சில ஆண்டுகளாக தண்ணீர் நிரப்ப முடியவில்லை. நிரந்தரமாக தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறை ஆய்வு நடத்தியது. இதற்காக மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தனியார் மண்ணியல் துறையினரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. வைகையில் இருந்து தெப்பத்தில் 50 கன அடி நீர் சேமிக்கப்படுகிறது. தமிழக கோயில் தெப்பங்களில் முதல் முறையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் பணி நடக்கிறது. இதனால் தண்ணீர் தெளிவாகவும், துர்நாற்றம் இல்லாமலும் இருக்கிறது. வெட்டி வேர் வாசம்: பசுமை கோயில்கள் இயக்கம் தலைமை தொழில்நுட்ப ஆலோசகர் முனைவர் எம்.பி.ராஜசேகரன் கூறியதாவது: தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் அனுமதியின் பேரில் ‘செரிவூட்டப்பட்ட நுண்ணுயிர் கலவை’ (இன்ஸ்ட்டி பயோ ரெமிடியேஷன்) நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீரில் 500 முதல் ஒரு கிலோ வரை கலந்து தெப்பத்திற்கு வரும் தண்ணீரில் சொட்டு, சொட்டாக கலக்கும்படி அனுப்பப்படுகிறது. தண்ணீரை மாசுபடுத்தும் ‘பாஸ்பேட்’ மற்றும் ‘நைட்ரேட்’ ஆகியவற்றை கிரகித்து கொள்ளும் மற்றும் தண்ணீரில் வளரும் அற்புத மூலிகைகளான வெட்டி வேர், கல்வாழை ஆகிய செடிகளை 1200 எண்ணிக்கையில் மிதவை மூங்கில் படுக்கைகளில் வைத்து தெப்பத்தில் விடப்படும். இதனால் தெப்பத்தின் தண்ணீருக்கு இயற்கை முறையில் சுத்திகரிப்பு நடக்கிறது. இத்தொழில்நுட்பம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்துள்ளது. இத்தொழில்நுட்பம் பாரம்பரியமானது. முன்பு வீடுகள் தோறும் பயன்படுத்தப்பட்டது. செலவு குறைவான இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிற கோயில் தெப்பங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துச்சென்றால், அபராதம் ... மேலும்
 
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar