Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில், ... நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடை மாலை சாத்துபடி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்கழி இசை விழா : பேசியபடியே பாடிய சுபா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2019
03:01

சேக்கிழாரின் பெரிய புராணத்தை அடிப்படையாகக் கொண்டு, ராமசுவாமி சிவன் இயற்றிய பாடல்களைப் பாடினார், சுபா கணேசன். இவற்றைப் படைத்த ராமசுவாமி சிவனும், மஹா வைத்தியநாத சிவனும், சிவன் சகோதரர்கள் என்றழைக்கப்பட்டனர் என்றார்.

சிவன் சகோதரர்கள் மும்மூர்த்திகளுக்குப் பின் தோன்றிய வாக்கேயக்காரர்களுக்குள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்களது முத்திரை, குஹதாஸ என்பது.இவர்களது தமிழ்ப்புலமை, இசைப்புலமை இரண்டையும், வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாராட்டியுள்ளார்.

ராமசுவாமி சிவனின் மற்ற படைப்புகள், இரட்டை மணிமாலை, திருவையாறு அந்தாதி, திருத்தொண்டர் போற்றிக் கலிவெண்பா, பிரகலாத சரித்திரம் மற்றும் சீதா கல்யாண க்ருதிகள் போன்றவை.ராமசுவாமி சிவன் பாடல்களாக எழுதியவை, பெரியபுராணத்தில் உள்ள சறுக்கங்களின் வரிசையைப் பின்பற்றி எழுதப்பட்டவை. அவற்றை அந்த வரிசையிலேயே பாடினார், சுபா கணேசன். ஒவ்வொரு பாடலுக்கு முன்னும், அது தெரிந்த ஒன்றாகவே இருப்பினும், அது சொல்ல வந்த கதையை, நமக்கு நினைவுபடுத்தும் வகையில், சிறிய உரை ஒன்றை அளித்தார். பாடல்களை நாம் அனுபவிக்க, இது ஏதுவாக அமைந்தது.

உதாரணத்திற்கு, தடுத்தாட்கொண்ட புராணத்தில், சிவபெருமான் நடத்திய திருவிளையாட லில், எவ்வாறு சுந்தரமூர்த்தி நாயனாரை வேதியர் வேடம் பூண்டு, அதட்டி, கல்யாணத்தை நிறுத்தினார் என்பதை விவரித்தார். இந்த இடத்தில் அதட்டிப் பேச, அடாணா ராகத்தை, ராமசுவாமி சிவன் தேர்ந்தெடுத்தது எவ்வளவு பொருத்தமானதாக இருந்திருக்கிறது, என்று வியந்தார் சுபா.

இவ்வாறு பல நுணுக்கமான ராகப் பொருத்தங்களையும், குறிப்புகளையும் மற்றும் பாடல் களிலுள்ள எதுகை மோனைகளின் அமைப்பு பற்றியும், மற்ற கவித்துவ விஷயங்களையும் அளித்தபடியே, மிகுந்த சுவாரசியத்துடன், பாடிப் பேசியது மெச்சும்படி இருந்தது. மற்றபடி இந்தக் கீர்த்தனைகளுக்கெல்லாம் ராகம், தாளம் என்ற குறிப்பு மட்டுமே உள்ளது. ஆனால், நொடேஷன் முறையில் ஸ்வரப்படுத்தப்படவில்லை என்ற தகவலையும் கொடுத்தார். இதன் காரணமாக தான், தன் முன்னோர்களிடமும் கேட்டு அனுபவித்துக் கற்றதை, கற்ற முறையில் ரசிகர்களுக்கு அளிப்பதாகவும் சொன்னார்  சுபா.

பேசியபடியே பாடுவது, சுலபமான காரியமன்று. இவ்விரண்டையுமே திறம்படச் செய்து, வந்திருந்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார், சுபா கணேசன். பல வகையான ராகங்களை, கீர்த்தனைகளுடன் பொருந்தி, ராக ஸ்வரூபம் தோன்றும்படி அளித்தது, சங்கீதத்தில் இவர் தொட்டிருக்கும் எல்லையை, நமக்கு உணர்த்திச் சென்றது.வயலினில், மீரா சிவராமகிருஷ்ணனும், மிருதங்கத்தில், நெல்லை பாலாஜியும் உடன் வாசித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர்.- எஸ்.சிவகுமார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar