Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சன்னிதானத்தில் மொபைலுக்கு வருகிறது ... சபரிமலை வழக்கு: நீதிபதிகள் கூறியது என்ன? சபரிமலை வழக்கு: நீதிபதிகள் கூறியது ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் நெய் அபிஷேகம் நிறைவு: நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நெய் அபிஷேகம் நிறைவு: நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
11:01

சபரிமலை, -சபரிமலையில் நெய் அபிஷேகம் நேற்றுடன் நிறைவு பெற்றது. மண்டல-, மகரவிளக்கு காலத்தில் 60 நாட்களாக நடைபெற்று வந்த நெய் அபிஷேகம் நேற்று காலை நிறைவு பெற்றது. அதன் பின்னர் கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு களபபூஜை நடத்தினார். பிரம்ம கலசம் பூஜித்து அதில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி எடுத்து கோயிலை வலம் வந்தார்.

பின்னர் மூலவருக்கு களபம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சபூஜை நடைபெற்றது.நேற்று இரவு 9:00 மணிக்கு ஐயப்பன் சரங்குத்திக்கு எழுந்தருளினார். பந்தளத்தில் இருந்து திருவாபரணங்களுடன் கொண்டு வரப்பட்ட திடம்பில் திருமுகத்துடன் இந்த எழுந்தருளல் நடைபெற்றது. இங்கு நாயாட்டுவிளிஎன்ற சடங்கு நடைபெற்றது.இது ஐயப்பன் வரலாறு மற்றும் சபரிமலை கோயில் வரலாற்றை தனி ராகத்தில் பாடும் நிகழ்ச்சியாகும். திருவிழாவுக்கு வந்த பக்தர்களை சரங்குத்தி வரை வந்து ஐயப்பன் வழி அனுப்பியதை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தீப்பந்தம் அணைக்கப்பட்டு, மேளதாளம் நிறுத்தப்பட்டு ஐயப்பன் மாளிகைப்புறம் கோயில் வளாகத்தில் உள்ள மணி மண்டபத்துக்கு எழுந்தருளினார். பக்தர்களை அனுப்பி விட்டு பூதகணங்களை அழைத்து வருவதாக நம்பப்படுகிறது.இன்று வரும் பக்தர்கள் நெய்யை கோயிலில் கொடுத்து விட்டு அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக பெற்று செல்லலாம். இரவு 10:00 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மணி மண்டபத்தில் குருதிபூஜை நடைபெறுகிறது. அதன் பின்னர் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.நாளை காலை 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி ராகவவர்மா முன்னிலையில் கோயில் நடை அடைத்ததும் திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும்.மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலை வருமானம் 255 கோடி ரூபாயை கடந்தது. கடந்த ஆண்டை விட 45 கோடி ரூபாய் அதிகமாகும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar