ஆந்திர மாநிலத்தில் குனுப்புடி என்ற ஊரில் சோமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் லிங்கத்தை சந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது. இந்த லிங்கம் நிறம் மாறும் தன்மை கொண்டது. அமாவாசை நாளில் கோதுமை நிறத்தில் காணப்படும் இந்த லிங்கம், பின்னர் சிறிது சிறிதாக நிறம் மாறி, பவுர்ணமியன்று வெண்மை நிறத்தில் காட்சியளிக்கிறது.