ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2019 02:03
திருப்புல்லாணி:- திருப்புல்லாணி பத்மாஸனித்தாயார் சமேத ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் வைணவ திவ்யதேசங்களில் 44வதாக திகழ்கிறது.இங்கு பங்குனி பிரம்மோத்ஸவ விழா மார்ச் 12 முதல் 22 வரை நடக்கிறது.
மார்ச் 13ல் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் (துவஜா ரோகணம்) கொடிப்பட்டம் ஏற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து விஷேச திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டிப்பாராயணம், பல்வேறு வாகனங்களில் உள், வெளிப்பிரகார வீதியுலா நடக்கிறது. மார்ச் 21 (வியாழன்) காலை 9:00 மணிக்கு மேல் 46 அடி உயரமுள்ள பெரிய தேரில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டமும், மறுநாள் சேதுக்கரை கடலில் ஆதிஜெகநாதப்பெருமாளும், பட்டாபிஷேக ராமரும் உற்ஸவ மூர்த்திகளாய் எழுந்தருளி தீர்த்தவாரி விழா நடக்கிறது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி சேதுபதி பிரம்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பஷே்கார் கண்ணன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.