Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாதவூர் திரவுபதியம்மன் கோயில் ... வால்பாறையில், சாய்பாபா படம் திறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் ஏழு நிலை ராஜகோபுர பணி முடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2019
01:03

மேட்டுப்பாளையம்: கற்கள் இல்லாததால், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் பாதியில் முட்கியுள்ளன.கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்களும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, கடைகள் ஏலம் விடுவதன் மூலம் ஆண்டுக்கு, ஏழு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் கிடைக்கிறது.

இது மிகவும் பழமையான கோவில் என்பதால், கோபுரம் அமைக்கும்படி பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்து சமய அறநிலையத்துறை, 3.40 கோடி ரூபாய் செலவில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட அனுமதி வழங்கியது. இதையடுத்து, 2017ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் துவங்கின.பேஸ் மட்டம் முடிந்து கல்காரப்பணிகளுக்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராசிபுரம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து வடிவமைக்கப்பட்ட கற்கள் வாங்கி வந்து பணிகள் செய்தனர். தற்போது கற்கள் வரத்து இல்லாததால், கடந்த நான்கு மாதங்களாக பணிகள் ஏதும் செய்யாத நிலையில் கோபுரப்பணிகள் பாதியில் நின்றுள்ளன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், பாதியில் நிற்கும் ராஜகோபுரத்தைக் கண்டு கலங்குகின்றனர். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில், ராஜகோபுர கல்காரப் பணிகளுக்கு தேவையான கற்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களில் வெட்டி எடுத்து வடிவமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் பணிகள் துவங்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி (உ.பி.), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் மார்ச் 19 அன்று அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் மரக்காயர்பட்டணம் பகுதியில் சீதாராம சுவாமிகள் ஞான யோகானந்த ஆசிரமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar