Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதி கோயிலில் பங்குனி திருவிழா 3,000 ... ராயபுரத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு ராயபுரத்தில் ஐம்பொன் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா

பதிவு செய்த நாள்

20 மார்
2019
01:03

மேட்டுப்பாளையம் : மிகவும் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை
செலுத்தினர்.மேட்டுப்பாளையம் -- ஊட்டி மெயின் ரோடு, காந்தி மைதானத்தில் மிகவும் பழமையான மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்தாண்டு கடந்த, 5ம் தேதி பூச்சாட்டுடன் விழா துவங்கியது. 12ம் தேதி கம்பம் நடுதலும், 14ல் கொடியேற்றமும், 18ல் குண்டம் திறப்பும், தேர்க்கலச பூஜையும் நடந்தன.நேற்று (மார்ச்., 19ல்) காலை, 9:00 மணிக்கு பவானி ஆற்றில், பக்தர்கள் அலகு குத்தி, அம்மன் சுவாமியை கோவிலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, 9:30 மணிக்கு தலைமை பூசாரி மோகன்குமார் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பூப்பந்தை உருட்டி விட்டு, முதலில் குண்டத்தில் இறங்கினார்.

அதைத்தொடர்ந்து, உதவி பூசாரிகள், ஆண், பெண், சிறுவர், சிறுமியர், கைக்குழந்தையுடன் ஆண்கள், பெண்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை
செலுத்தினர்.பின்பு சுவாமிக்கு அலங்கார பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. தன்னார்வ அமைப்பினர் பக்தர்களுக்கு, அன்னதானம், நீர்மோர், கம்மங்கூழ் ஆகியவை வழங்கினர்.

இன்று (மார்ச்., 20ல்) மாலையில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், 4:30 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளன. நாளை (21ம் தேதி) அம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலாவும், 22ல் மாலை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதலும், 24 ம் தேதி ராமசாமி நகர் மாகாளியம்மன் கோவிலில் இருந்து அம்மனுக்கு பால்குடங்கள் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar