திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2019 11:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உற்ஸவ பட்டாபிஷேகம் நடந்தது.
இன்று பகல் 1:00 முதல் 1:25 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.மார்ச் 12 துவங்கிய இந்த உற்ஸவத்தில் நேற்று பகல் 3:00 மணிக்கு சுவாமி, தெய்வானை பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருள, ரத வீதிகளில் பச்சை குதிரை ஓட்டம் நடந்தது. கிராமத்தினர் சார்பில் பச்சை குதிரைக்கு கவாட களி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. இரவு 7:30 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். சுவாமி கரத்தில் நவரத்தின செங்கோல், வெள்ளி சேவல் மற்றும் மயில் கொடிகள் சாத்துப்படியானது. சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.